1. Home
  2. தமிழ்நாடு

ஆபாச படத்தை ஷேர் செய்த இளைஞர்… போலீஸ் அதிரடி!!

ஆபாச படத்தை ஷேர் செய்த இளைஞர்… போலீஸ் அதிரடி!!


சிறுமிகளின் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்து ஷேர் செய்த இளைஞர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

18 வயதிற்குட்பட்ட சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளங்கள் வாயிலாக பார்ப்பவர்கள் மற்றும் ஷேர் செய்பவர்களை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சூளை பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவரான சந்தோஷ்குமார் (17), சிறுமிகளின் ஆபாச படத்தை பார்த்து தனது நண்பர் ஒருவருக்கு ஷேர் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான தேசிய மையம் வேப்பேரி அனைத்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தது.

ஆபாச படத்தை ஷேர் செய்த இளைஞர்… போலீஸ் அதிரடி!!

அதன் பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில் சந்தோஷ் குமாரின் படிப்பிற்காக அவரது தந்தையான சென்னை உயர் நீதிமன்ற கிளர்க் சுப்பிரமணியன் செல்போனை வாங்கி கொடுத்தது தெரியவந்தது.

அந்த செல்போனை பயன்படுத்தி சிறுமிகளின் ஆபாச படங்களை பார்த்து வந்துள்ளார். அந்த ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து அவரது நண்பர் குகனுக்கு இன்ஸ்டாகிராமில் அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள சந்தோஷ்குமாரை வேப்பேரி அனைத்து மகளிர் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like