1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- நோ ஆல் பாஸ்.. திட்டமிட்டபடி தேர்வு.. பள்ளிக் கல்வித்துறை விளக்கம்..!

#BREAKING:- நோ ஆல் பாஸ்.. திட்டமிட்டபடி தேர்வு.. பள்ளிக் கல்வித்துறை விளக்கம்..!


தமிழகத்தில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில், ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்திலும் அனைத்து மாணவர்களும் தேர்வின்றி தேர்ச்சி என்று தகவல் வெளியானது.

இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, தமிழக பள்ளிக்கல்வித்துறை அளித்துள்ள விளக்கத்தில், ‘ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ் என பரவும் தகவல் தவறானது.

வரும் மே மாதம் 6-ம் தேதி முதல் 13-ம் தேதிக்குள் ஒன்று முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி இறுதித் தேர்வுகள் நடத்தப்படும்.

9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டாயம் ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும்’ எனத் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like