1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் பல்லி பிரியாணி.. ஆர்டர் செய்து சாப்பிட்ட அப்பாஸ் ஆஸ்பத்திரியில் அட்மிட்..!

சென்னையில் பல்லி பிரியாணி.. ஆர்டர் செய்து சாப்பிட்ட அப்பாஸ் ஆஸ்பத்திரியில் அட்மிட்..!


சென்னை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ் அருகே உள்ள பிரபல ஹோட்டலில் அப்பாஸ் என்பவர் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்ட போது பல்லி செத்துக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பல்லி பிரியாணி விற்ற பிரபல ஹோட்டல் : புகார் சொன்னவருக்கு கிடைத்த பதில் என்ன  தெரியுமா?
அந்த வீடியோவில், “ஒரு வேலையாக புரசைவாக்கம் வந்தேன். மதியம், அங்குள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தேன். அப்போது, பிரியாணியில் பல்லி ஒன்று செத்துக் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆனேன். ஆனாலும், வயிற்று வலி தொடர்ந்து இருந்து வருகிறது. என் உயிருக்கு ஏதாவது ஏற்பட்டால் அந்த ஹோட்டல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like