வீடு, வாகன, தனிநபர் கடன் வட்டி உயருகிறது..!
வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதம் 0.40 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது.
ஆர்பிஐ அறிவிப்பால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கிறது.
எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி உள்ளிட்ட வங்கிகள் சமீபத்தில் கடன் வட்டியை உயர்த்திய நிலையில், மேலும் வட்டி உயர வாய்ப்பு உள்ளது.