1. Home
  2. தமிழ்நாடு

ரேஷன் கார்டுகளை உடனே ஒப்படைங்க.. அரசு அதிரடி உத்தரவு..!

ரேஷன் கார்டுகளை உடனே ஒப்படைங்க.. அரசு அதிரடி உத்தரவு..!


நாடு முழுவதும் இலவச ரேஷன் பொருட்கள் பெற தகுதி இல்லாத நபர்கள் உடனடியாக தங்கள் ரேஷன் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சூழலில், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, வருடத்திற்கு 10000 ரூபாய்க்கு கீழ் வருமானம் பெறும் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை மத்திய அரசு வழங்கியது.

இந்நிலையில், தகுதியில்லாத ஏராளமான ரேஷன் கார்டுதாரர்கள் இலவசமாக ரேஷன் பொருட்களை பெற்று வருவதாக தகவல் வெளியாகியது.

இதையடுத்து, தகுதி இல்லாத நபர்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, தகுதி இல்லாத நபர்கள் உடனடியாக தங்கள் ரேஷன் கார்டுகளை சரண்டர் செய்ய வேண்டும்; அவ்வாறு தகுதி இல்லாத நபர்கள் இலவசமாக ரேஷன் பொருட்கள் பெற்றால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி 100 சதுர அடிக்கு மேல் நிலம், வீடு, பிளாட், கார், டிராக்டர் வைத்திருப்போர், கிராமங்களில் 2 லட்சம் ரூபாய்க்கு மேலும், நகரங்களில் 3 லட்சம் ரூபாய்க்கு மேலும் வருமானம் ஈட்டுவோர் அனைவரும் தங்கள் ரேஷன் கார்டை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like