1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்.. பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை !!

பெரும் சோகம்.. பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை !!

கடந்த சில மாதங்களாக இளம் நடிகைகள் தற்கொலை செய்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டு வருகின்றனர். கேரளா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இளம் நடிகைகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் பிரசாத் (43)தனது வீட்டு வாசலில் உள்ள மரத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .

பெரும் சோகம்.. பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை !!

பிரபல மலையாள நடிகரான என்.டி.பிரசாத் பல திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ளார். நிவின் பாலி நடிப்பில் வெளியான ’ஆக்‌ஷன் ஹீரோ பைஜூ’ படத்தில் வில்லனாகவும் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் என்.டி.பிரசாத் இரவு தனது வீட்டுக்கு எதிரில் இருந்த மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். ‘கொச்சி அருகிலுள்ள களமச்சேரியை சேர்ந்த இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன.

தகவல் அறிந்து சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் போதைப் பொருளுடன் பிடிபட்டது உட்பட பல வழக்குகளில் நடிகர் என்.டி.பிரசாத் குற்றம் சாட்டப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பிரசாத் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.

பெரும் சோகம்.. பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை !!

இந்த நிலையில் மன அழுத்தம் மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக என்.டி.பிரசாத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like