முன்னாள் எம்பி கே.கே.வீரப்பன் காலமானார்!!
முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.கே.வீரப்பன் திமுக செயலாளர், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவராக இருந்தவர். 1991-96 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், அதே வருட காலத்தில் ஊராட்சிக்குழு தலைவராகவும் இருந்தவர்.
இவர் 1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் கபிலர்மலை தொகுதியில் இருந்து திமுக வேட்பளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர், 2001 தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பை திமுக நிராகரித்துடன், கட்சியின் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவரை இடைநீக்கம் செய்தது. அதன்பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், வயது முதிர்வு காரணமாக ஓய்வு எடுத்து வந்தார்.
இந்த நிலையில், நுரையீரல் மற்றும் நரம்பு மண்டல பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது உடல் நாமக்கல் சந்தைபேட்டையில் உள்ள அவரமது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்திரசேகர் கால்நடை மருத்துவராகவும், ராஜேந்திரகுமார் என்ஜினீயராகவும் பணியாற்றி வருகின்றனர்.