1. Home
  2. தமிழ்நாடு

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு.. வெளியானது சூப்பர் அறிவிப்பு..!

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு.. வெளியானது சூப்பர் அறிவிப்பு..!


தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் பாடங்களை நடத்தலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அனுமதித்துள்ளது.

அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளை என்ற தொண்டு அமைப்பு, தமிழகம் உட்பட 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருச்சி,மதுரை உட்பட 12 மாவட்டங்களில் கடந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு science centre, lab on a bike, mobile science, I mobile உள்ளிட்ட வகுப்புகளை எடுக்க அகஸ்தியா பன்னாட்டுத் தொண்டு நிறுவனத்திற்கு பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நடைமுறை, விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like