1. Home
  2. தமிழ்நாடு

தேர்வுக்கான நேரம் குறைப்பு.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!

தேர்வுக்கான நேரம் குறைப்பு.. பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு..!


தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெறவுள்ளது. மேலும், 10, 11, 12-ம் வகுப்புக மாணவர்களுக்கு வரும் 25-ம் தேதி செய்முறை தேர்வு நடைபெற உள்ளது.

செய்முறை தேர்வுக்கான மையங்கள் மாணவர்கள் படிக்கும் அந்தந்த பள்ளியிலேயே அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வேறு பள்ளிகளில் இருந்து, தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆசிரியர்களுக்கு செய்முறை தேர்வுக்கு பணியிடம் ஒதுக்கப்பட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், செய்முறை தேர்வுக்கான நேரம் 3 மணியில் இருந்து 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன், செய்முறைத் தேர்வுக்கான மதிப்பெண்கள் 50-லிருந்து 30 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த 30 மதிப்பெண்களில் 10 மதிப்பெண்கள் அக மதிப்பீட்டு மதிப்பெண்ணாக வழங்கப்படுகிறது. எனவே, மாணவர்கள் 20 மதிப்பெண்களுக்கு மட்டுமே செய்முறைத் தேர்வுகளை எழுத உள்ளனர்.

Trending News

Latest News

You May Like