1. Home
  2. தமிழ்நாடு

கருமுட்டை விற்பனை விவகாரம்.. பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி..!

கருமுட்டை விற்பனை விவகாரம்.. பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி..!


ஈரோட்டில், கருமுட்டை விற்பனை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை விவகாரத்தில் சிறுமியின் தாய் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் என சொல்லப்படும் சையத் அலி, புரோக்கர் மாலதி என 3 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர். அதன் பின்னர், சிறுமிக்கு போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த 16 வயது சிறுமி ஈரோடு அரசு காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து சிறுமியை மீட்ட காப்பகத்தினர், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது சிறுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

Trending News

Latest News

You May Like