1. Home
  2. தமிழ்நாடு

காவி மயமாகிறது கல்வி.. பாஜக மூத்த தலைவர் வேதனை..!

காவி மயமாகிறது கல்வி.. பாஜக மூத்த தலைவர் வேதனை..!

கர்நாடக பாஜகவின் மூத்த தலைவரும், எம்.எல்.சி.யுமான எச்.விஸ்வநாத் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து பகத்சிங், நாராயண குரு போன்றோரின் வரலாறுகள் நீக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக பாடநூல் குழு தலைவர் ரோகித் சக்ர தீர்த்த, மத அடிப்படையில் பாடத்திட்டத்தை மாற்றி அமைத்து வருகிறார். இது சரியல்ல. சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள அந்த பாடநூல் குழுவை ரத்து செய்ய வேண்டும்.

இந்த குழுவில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் இல்லை. முன்பு இருந்த பாடத்திட்டம் முழுவதும் சரியாக இருந்தது என்று நான் சொல்லவில்லை. அதிலும் சில தவறுகள் உள்ளன. அந்த தவறுகளை சரி செய்வதை நான் எதிர்க்கவில்லை.

கர்நாடகத்தில் கல்வி காவி மயமாக்கப்பட்டு வருகிறது. இதை நிறுத்த வேண்டும். பாடத்திட்டங்கள் ஜனநாயக ரீதியில் அமைக்கப்பட வேண்டும்” என்று எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like