1. Home
  2. தமிழ்நாடு

சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்... தமிழக மக்கள் குறித்து நெகிழ்ச்சி

சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்... தமிழக மக்கள் குறித்து நெகிழ்ச்சி

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மே மாதம் 19ஆம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டறிந்தனர். சென்னை தனியார் மருத்துவமனையில் சில நாட்கள் சிகிச்சை பெற்றார்.

சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்... தமிழக மக்கள் குறித்து நெகிழ்ச்சி

பின்னர், வயிற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள ரத்தக் கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து இந்த நிலையில் டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா, மகன் சிம்பு மற்றும் மருத்துவர் ஸ்ரீதர் ஆகியோருடன் கடந்த ஜூன்14 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார். நியூயார்க்கில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு அவரது மகன் சிம்பு உடனிருந்து டி.ராஜேந்தரை கவனித்துக்கொண்டார்.

சென்னை திரும்பினார் டி.ராஜேந்தர்... தமிழக மக்கள் குறித்து நெகிழ்ச்சி

அங்கு சமீபத்தில் அவருக்கு அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு டி.ராஜேந்தர் குடும்பத்தாருடன் ஓய்வில் இருந்து வந்தார். இந்த நிலையில் டி.ராஜேந்தர் இன்று அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார். எனக்காக அன்பு காட்டிய தமிழக மக்கள் பிரார்த்தனையின் பலன் இது என்று கூறினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like