1. Home
  2. தமிழ்நாடு

நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெல்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெல்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!


“நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெல்க” என, நாளை தொடங்க உள்ள பொதுத்தேர்வுகளை எழுத இருக்கும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாளை (5-ம் தேதி) பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நடக்க உள்ளது. இத்தேர்வை 8.60 லட்சம் பேர் எழுத உள்ளனர். இதில் 28,353 தனித்தேர்வர்கள், 3,638 மாற்றுத்திறனாளிகள், 6 மூன்றாம் பாலினத்தவர், 73 சிறை கைதிகள் ஆகியோரும் அடங்குவர்.
நம்பிக்கையோடு எதிர்கொண்டு வெல்க.. மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!
இந்நிலையில். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் நாளை மறுநாள் (6-ம் தேதி) பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகள்!

நீங்கள் கற்றதை மதிப்பிடுபவைதான் தேர்வுகளே தவிர, உங்களை மதிப்பிடுவது அல்ல. நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொண்டு வெல்க!" என்று தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like