1. Home
  2. தமிழ்நாடு

BREAKING: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு !!

BREAKING: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு !!


டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கைகள் தொடர்பாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 ஊதியம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

BREAKING: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு அறிவிப்பு !!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் 6,715 மேற்பார்வையாளர்கள், 15 ஆயிரம் விற்பனையாளர்கள், 3,900 உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 24,800-க்கும் அதிகமான பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களுக்கு 2022 ஏப்ரல் மாதம் முதல் ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். ஊதிய உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.16.67 கோடி கூடுதலாக செலவாகும் என்றும் குறிப்பிட்டார்.

newstm.in


Trending News

Latest News

You May Like