BREAKING: கைக்குழந்தையுடன் ஆபத்தான பயணம் மூலம் தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள் !!
இலங்கையில் இருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த தமிழர்களான 5 பேர் அகதிகளாக படகு பயணம் மூலம் தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அவற்றின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் மூன்றுவேலை உணவுகூட கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.
இந்த விவகாரம் அங்கு அரசியலிலும் எதிரொலித்துள்ளது. அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, உணவுப் பஞ்சத்தால் தமிழ் குடும்பங்களைச் சேர்ந்த பலர் அகதிகளாக தமிழகத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். அவ்வாறு வருபவர்கள் ராமேசுவரத்தில் உள்ள முகாமில் தங்கவைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து இதுவரை 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த இலங்கை தமிழர்கள் தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
newstm.in