1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING:- ஓபிஎஸ்க்கு பின்னடைவு..!! அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தம்...!!

#BREAKING:- ஓபிஎஸ்க்கு பின்னடைவு..!! அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு சொந்தம்...!!


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி வசமாகிறது. உயர்நீதிமன்ற உத்தரவால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இந்த கலவரத்தை தொடர்ந்து தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து ஒபிஎஸ், ஈபிஎஸ் தரப்பில் உரிமையியல் வழக்கு தனித்தனியாக மனு தாக்கல் செய்த நிலையில், இந்த மனுக்கள் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையையும், வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்யுமாறு காவல்துறை தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார். இந்த நிலையில், இந்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தீர்ப்பு வழங்கினார்.அந்த தீர்ப்பில்,'அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் உடனடியாக வழங்க உத்தரவிடுகிறோம்.

ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது. அதிமுக அலுவலகத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை தடுக்கும் வகையில் தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடுகிறோம்.அதிமுக அலுவலகத்திற்கு போதிய பாதுகாப்பை காவல்துறை வழங்க வேண்டும்,'இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like