1. Home
  2. தமிழ்நாடு

ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லக்கூடாது.. கோட்டாட்சியர் உத்தரவு..!

ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்லக்கூடாது.. கோட்டாட்சியர் உத்தரவு..!


தருமபுரம் ஆதீனத்தில் பாரம்பரியமாக நடைபெறும் பட்டினப்பிரவேச விழாவில் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆதீன குரு முதல்வருக்கு குருபூஜை தினத்தன்று பட்டினப்பிரவேச விழா நடத்தப்படும். அந்த விழாவின் போது, ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர வைத்து பக்தர்கள் தூக்கிச் சென்று வீதி உலா வருவது வழக்கம்.

இவ்வாறு ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்வதற்கு திராவிடர் கழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மனிதனை மனிதனே சுமப்பது மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகம் கூறி எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், தருமபுரம் ஆதீனம் குருமகா சன்னிதானம் பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்வதற்கு தடை விதித்து, மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like