1. Home
  2. தமிழ்நாடு

அதிமுகவில் தற்போது அராஜகப் போக்கு, தர்மம் மீண்டும் வெல்லும் : ஓபிஎஸ்!!

அதிமுகவில் தற்போது அராஜகப் போக்கு, தர்மம் மீண்டும் வெல்லும் : ஓபிஎஸ்!!


அதிமுகவில் தற்போது சர்வாதிகார அராஜகப் போக்கு நிலவுவதாகவும், தர்மம் மீண்டும் வெல்லும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒற்றைத் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஏராளமான திமுக தொண்டர்கள் முழக்கமிட்டனர். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒருவர், உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

காவலில் இருந்த காவல் துறையினர், அவரை தடுத்து தண்ணீரை ஊற்றினர். பின்னர் காவல் நிலையத்துக்கு அனைவரையும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியபிறகு அனுப்பிவைத்தனர்.

அதிமுகவில் தற்போது அராஜகப் போக்கு, தர்மம் மீண்டும் வெல்லும் : ஓபிஎஸ்!!

இந்த சம்பவம் வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் .பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். அதில், இதுபோன்ற விபரீதமான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என கழகத் தொண்டர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த தருணத்தில், "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.


எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், அதிமுகவில் சர்வாதிகாரம், அராஜகப்போக்கு அதிகரித்துள்ளதாக ஓபிஎஸ் மறைமுகமாக இபிஎஸ் தரப்பை விமர்சித்துள்ளார் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like