1. Home
  2. தமிழ்நாடு

நீங்கள் யார் என்பதை ஒரு தேர்வு முடிவு செய்யாது.. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் ட்வீட்..!

நீங்கள் யார் என்பதை ஒரு தேர்வு முடிவு செய்யாது.. சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிரதமர் ட்வீட்..!


சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக நீண்ட நாட்கள் தாமதமான நிலையில், இன்று (22-ம் தேதி) காலை 9 மணிக்கு 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், அதைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது.

இந்த நிலையில், 12 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மற்றும் ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற எனது அனைத்து இளம் நண்பர்களுக்கும் வாழ்த்துகள்.

இளைஞர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் பாராட்டுக்குரியது. மனிதகுலம் ஒரு மாபெரும் சவாலை எதிர்கொண்ட காலத்தில் நீங்கள் இந்தத் தேர்வுகளுக்கு தயாராகினர். சில மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளில் மகிழ்ச்சி அடையாமல் இருக்கலாம்,

ஆனால், ஒரு தேர்வு அவர்கள் யார் என்பதை ஒருபோதும் வரையறுக்காது என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் உங்களுக்கு ஆர்வமுள்ள பாடங்களைத் தொடர்ந்து படிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் எதிர்கால முயற்சிகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், “சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

மாணவர்களின் கல்விப் பயணம் பயனுள்ளதாக அமைய வாழ்த்துகள். வரும் காலங்களில் நீங்கள் வெற்றியின் புதிய உயரங்களை எட்டுவீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


Trending News

Latest News

You May Like