அதிரடி! செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடி கைது!!
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளை குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். ரயில்களுக்காக காத்திருக்கும் பயணிகள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே உறங்குவதும் உண்டு.
அப்படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் பயணிகள், சார்ஜ் போட்டிருக்கும் பயணிகள் செல்போன்கள் திருடு போவது தொடர்கதையாக இருந்து வந்தது.
தொடர்ந்து மொபைல் போன்கள் திருடு போவதாக வந்த புகார்கள் வந்ததை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த ரயில்வே போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக காதல் ஜோடியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், ஆவடியை சேர்ந்த ஜெயஸ்ரீ (21) மற்றும் திருவொற்றியூரைச் சேர்ந்த பார்த்திபன் (23)ஆகிய இருவரும் காதலர்கள்.
இவர்கள் பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டு அதனை விற்று ஜாலியாக ஊர் சுற்றி சொகுசாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in