1. Home
  2. தமிழ்நாடு

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !

தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !


பொன்னேரி அருகே தேங்காய் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் வசந்த். இவரது இளைய மகன் மூன்றரை வயதான மகன் சஞ்சீஸ்வரன். இந்நிலையில், நேற்று காலை பெற்றோர் கவனிக்காத நேரத்தில் வீட்டிலிருந்த தேங்காயை சஞ்சீஸ்வரன் சாப்பிட்டுள்ளார். அப்போது, தேங்காய் துண்டொன்று சிறுவனின் தொண்டையில் சிக்கி கொண்டது.

இதனால், சிறுவனுக்கு மூச்சுத்திணறியது. மேலும் சிறுவன் மூச்சு திணறி துடிப்பதை கண்டு உறவினர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அதற்குள் தேங்காய் துண்டு சிக்கி மூச்சு திணறி குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
தேங்காய் துண்டு தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு !
இதனால் குழந்தையின் பெற்றோர்களும், உறவினர்களும் கதறி அழுதனர். 3 வயது குழந்தை உயிரிழந்த பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேங்காய் போன்ற கடினமான பொருட்களை சாப்பிடும் போது கவனம் தேவை என்றும், குறிப்பாக குழந்தைகளுக்கு அதனை முழு துண்டாக கொடுக்கக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால் தேங்காப் பூவை கொடுக்கலாம் அதுவும் கவனமாக என்று கூறுகின்றனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like