வேன் மீது லாரி மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழப்பு..!
ம.பியில் நடந்த திருமணத்தை முடித்துவிட்டு ராஜஸ்தான் துகர்கான் பகுதியைச் சேர்ந்த 10 பேர் ஒரே வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதிவேகமாக வந்த லாரி இவர்கள் சென்ற வேன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 9 பேரும் உயிரிழந்தனர். தொடர்ந்து விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்த அனைவருமே 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.