ஒரே நாளில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது..!!
![ஒரே நாளில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 800ஐ தாண்டியது..!!](https://newstm.in/static/c1e/client/106785/migrated/1e559b2e9c62778258038d812bd25a07.webp?width=836&height=470&resizemode=4)
இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 126 நாட்களுக்குப் பிறகு 800ஐ தாண்டியுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.
நான்கு இறப்புகளுடன் இறப்பு எண்ணிக்கை 5,30,799 ஆக உயர்ந்து இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது. அதில் ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிராவில் தலா ஒரு மரணம் பதிவாகியுள்ளது, மற்ற இரண்டு மரணங்கள் கேரளாவில் பதிவாகியுள்ளது.
நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,41,58,161 ஆக உயர்ந்து மீட்பு விகிதம் 98.80 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 220.64 கோடி (220,64,97,638) டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.