1. Home
  2. தமிழ்நாடு

மும்பையில் சோகம் : ராட்சத இரும்பு பேனர் விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு..!

1

இன்று மும்பை தானே, பால்கர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புழுதிப்புயல் வீசியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. விமான சேவை பாதிக்கப்பட்டதால், மக்கள் அவதியடைந்தனர். 

இந்த புழுதி புயலால் பெட்ரோல் பங்க் அருகே இருந்த ராட்சத விளம்பர பேனர் திடீரென சரிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு. இதுவரை விபத்தில் சிக்கிய 67 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு படை தகவல் தெரிவித்துள்ளனர்.

புழுதி புயலுடன் மழையும் பெய்ததால் மும்பை விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவதும் தரையிறக்கப்படுவதும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புழுதி புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like