1. Home
  2. தமிழ்நாடு

பிரியாணி சாப்பிட்ட 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி.. ஒருவர் உயிரிழப்பு..!

பிரியாணி சாப்பிட்ட 8 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி.. ஒருவர் உயிரிழப்பு..!

திருவாரூர் மாவட்டம், திருவாசல் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (29); இவருடைய மனைவி மாரியம்மாள் ( 26). இவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், மாரியம்மாளுக்கு ஐந்தாவது மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சி விக்னேஷ் வீட்டில் நடைபெற்றுள்ளது. இதில் 50-க்கும் அதிகமான உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

விருந்து நிகழ்ச்சியில், தக்காளி சாதம், தயிர் சாதம், புளி சாதம், கறிவேப்பிலை சாதம், லெமன் சாதம் ஆகியவற்றுடன் சிக்கன் பிரியாணியும் பரிமாறப்பட்டுள்ளது. இதனை சாப்பிட்ட கர்ப்பிணி மாரியம்மாள் உள்ளிட்ட 8 பேருக்கு வாந்தி, தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டது.


இதையடுத்து, ஐந்து பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கர்ப்பிணி மாரியம்மாள் மற்றும் நான்கு வயது குழந்தை ஒன்றும் திருவாரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மாரியம்மாளின் தந்தை அடியக்கமங்கலம் அரசு மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலங்குடியைச் சேர்ந்த செல்வமுருகன் (24) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து திருவாரூர் வட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like