1. Home
  2. தமிழ்நாடு

கணவரை தேடிச் சென்ற இளம் பெண்ணை காவல் நிலையத்திலேயே 8 நாட்கள் சிறை வைத்து...

கணவரை தேடிச் சென்ற இளம் பெண்ணை காவல் நிலையத்திலேயே 8 நாட்கள் சிறை வைத்து...

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண், கிஷன்கஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்திருக்கிறார். அதே ஊரிலேயே கணவனுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். தனது கணவரை கடந்த சில தினங்களாக காணவில்லை என்பதால் தெதாகஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார் .

அந்த காவல் நிலையத்தின் அதிகாரி நீரஞ்குமார் இது குறித்து அந்த கிராமத் தலைவருக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். அவரும் காவல் நிலையத்திற்கு வந்து பெண்ணின் கணவரை கண்டுபிடிக்க உதவி செய்வதாக கூறி இருக்கிறார். அதுவரைக்கும் அந்த பெண்ணை காவல் நிலையத்தில் தங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் நீரஜ் குமார். காவல் நிலையத்தில் தங்கியிருந்து சின்ன சின்ன வேலைகளை செய்து வந்து வருமாறு சொல்லி இருக்கிறார்.


கணவரை தேடிச் சென்ற இளம் பெண்ணை காவல் நிலையத்திலேயே 8 நாட்கள் சிறை வைத்து...

இப்படியே எட்டு நாட்கள் கடந்து இருக்கின்றன. அந்த பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து நீரஜ் குமார் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். அந்த கிராமத் தலைவரும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். கடைசியில் தான் அந்த பெண்ணின் கணவரை கண்டுபிடித்து கொடுத்திருக்கிறார் நீரஜ் குமார். அவரிடம் இருந்து 2 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டுதான் அந்த பெண்ணை விடுவித்து இருக்கிறார்.

நடந்ததை எல்லாம் வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று விரட்டி அனுப்பி இருக்கிறார் நீரஜ் குமார். ஆனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் கணவனை அழைத்துக் கொண்டு சென்று மாவட்ட காவல் துறை உயர் அதிகாரியிடம் புகார் அளித்திருக்கிறார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டதால் இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் விசாரணையில் எட்டு நாட்கள் காவல் நிலையத்தில் பெண்ணை சிறை வைத்தது உறுதியாக இருக்கிறது . இதனால் தங்கள் மீது கடுமையான வழக்கு பாயும் என்பதால் நீரஜ்குமார் தலைமறைவாகி இருக்கிறார். அந்த ஊர் தலைவரும் தலைமறைவாகி இருக்கிறார். இருவரையும் பிடிக்கவும் இவர்கள் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Trending News

Latest News

You May Like