1. Home
  2. தமிழ்நாடு

வெட்டு, குத்து இல்லை.. ஊரடங்கு காலத்தில் சென்னையில் 79 % குறைந்த குற்றச்சம்பவங்கள்..!

வெட்டு, குத்து இல்லை.. ஊரடங்கு காலத்தில் சென்னையில் 79 % குறைந்த குற்றச்சம்பவங்கள்..!


கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் சென்னை நகரத்தில் நடைபெறும் குற்றச்சம்பவங்களின் விகிதம் 79% அளவிற்கு குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் நடமாட்டம் நாட்டில் 80 சதவிகிதம் குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

அதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடந்த குற்றச் செயல்களுடன் ஒப்பிடும்போது, ஊரடங்கு காலமான அதாவது மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரை திருட்டு, கொலை மற்றும் கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் சென்னையில் உள்ள நகரங்களில் 79% குறைவாக உள்ளது என்று காவல்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
 
வெட்டு, குத்து இல்லை.. ஊரடங்கு காலத்தில் சென்னையில் 79 % குறைந்த குற்றச்சம்பவங்கள்..!

இது தொடர்பாக சென்னை காவல்துறையின் புள்ளிவிவரப்படி, பிப்ரவரி 25 முதல் மார்ச் 15 வரையிலான காலப் பகுதியுடன் ஒப்பிடும்போது கொலைகளின் எண்ணிக்கை 44%, கொள்ளை சம்பவங்கள் 75%, திருட்டு 81% மற்றும் வீட்டை உடைத்துத் திருடுவது 59% ஊரடங்கு காலத்தில் குறைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மார்ச் 25 முதல் ஏப்ரல் 15 வரையிலான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 71 ஆக இருந்த நிலையில், பிப்ரவரி 25 முதல் மார்ச் 15 வரையிலான இந்த குற்றங்களின் ஒப்பீடும் மோது அதன் எண்ணிக்கை 318 ஆக இருந்துள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

வெட்டு, குத்து இல்லை.. ஊரடங்கு காலத்தில் சென்னையில் 79 % குறைந்த குற்றச்சம்பவங்கள்..!

இதேபோல், போக்குவரத்து தொடர்பான வழக்குகள், அபாயகரமான விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் கடுமையான காயங்கள் போன்ற சம்பவங்களும் ஊரடங்கு காலத்தில் குறைந்தே காணப்படுகின்றன.  

newstm.in 

Trending News

Latest News

You May Like