1. Home
  2. தமிழ்நாடு

71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி!!

71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி!!

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடைபெறுகிறது. அதில், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்குகிறார்.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார்.


71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்குகிறார் பிரதமர் மோடி!!

இந்நிலையில் இன்று 71 ஆயிரம் பேருக்கு காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்படுகின்றன. சட்டசபை தேர்தல் நடக்கும் குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெறாது.

வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. புதிதாக தேர்வு செய்ய பட்டவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

newstm.in

Trending News

Latest News

You May Like