1. Home
  2. தமிழ்நாடு

மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்!!

மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்!!

மறைந்த மனைவியின் நினைவாக தொழிலதிபர் ஒருவர் சிலை வைத்து நினைவு தினத்தை அனுசரித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த நாராயணன் (70) என்ற தொழிலதிபரின் மனைவி ஈஸ்வரி 8 ஆண்டுகளுக்கு முன் உடல் நல குறைவால் காலமானார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர்.

பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமான நிலையில், இவர் மட்டும் தனிமையில் இருந்துள்ளார். இந்த சூழலில் மனைவிக்கு அவர் சிலை செய்ய நினைத்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் சிலிக்கான் சிலை செய்ய பெங்களூரு தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்தார்.


மனைவிக்கு சிலை வைத்த 70 வயது முதியவர்!!

தனது மனைவியின் நினைவு நாளுக்கு முன்பாகவே அதனை செய்ய கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று அவரது நினைவு நாளை அவரது வீட்டில் சிலையை வைத்து அனுசரித்து நினைவுகூர்ந்தார்.

இந்த சிலை தத்ரூபமாக அவரது மனைவி ஈஸ்வரியின் உண்மையான உருவம் போல இருந்துள்ளது. இந்நிகழ்வில் உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று சிறப்பு பூஜை செய்து சிலையை வழிபட்டனர். மேலும் வாசலில் 2 லட்சம் ரூபாய் செலவில் மனைவியின் வெண்கல சிலையையும் வைத்துள்ளார்.

மனைவியின் நினைவு தன்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக 9 லட்சம் ரூபாய் செலவில் இந்த சிலையை செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like