1. Home
  2. தமிழ்நாடு

60 ஆண்டுகளுக்கு பிறகு லோகோ- வை மாற்றிய நோக்கியா!

60 ஆண்டுகளுக்கு பிறகு லோகோ- வை மாற்றிய நோக்கியா!

ஸ்மார்ட்போன்களின் வருகைக்கு முன்பு அனைவரையும் நோக்கியா நிறுவனமே, ஆக்கிரமித்து இருந்தது. ஆண்ட்ராய்டு மொபைல்களின் ஆதிக்கத்தில் நோக்கியா நிறுவனம் பின் தங்கியது. தற்போது புதுப்புது மாடல்களில் மொபைல் ஃபோன்களை வெளியிட்டு வரும் நோக்கியா நிறுவனம், தங்கள் லோகோவை மாற்றியுள்ளது.

60 ஆண்டுகளுக்கு பிறகு ஆண்ட்ராய்டு உலகிற்கு ஏற்ப, முதன் முறையாக நோக்கியா நிறுவனம் லோகோவை மாற்றியுள்ளது. பழைய லோகோவின் நீல நிறத்திற்கு பதிலாக, வெள்ளை நிறத்திலும், எழுத்து வடிவங்களிலும் மாற்றங்களைக் கொண்டு, புதிய நோக்கியா லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

நோக்கியா நிறுவனம் என்பது பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டுள்ள ஒரு பன்னாட்டு தகவல் தொடர்பு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like