சீமான் மீது 60 வழக்குகள் பதிவு..!தமிழகம் முழுவதும் குவியும் புகார்கள்..!
'ஈ.வெ.ரா., குறித்து, சீமான் தொடர்ந்து அவதுாறாக பேசி வருகிறார்.
சீமானின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகள் சீமானுக்கு எதிராக புகார் அளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர், தென்காசி, சேலம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் என இதுவரை 11 மாவட்டங்களில் பல்வேறு பிரிவுகளில் சீமான் மீது செய்யப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ள நிலையில், ஈரோடை சேர்ந்த ஈவேராவையே சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பது அங்கு நாம் தமிழர் வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் பேசிக் கொள்ளப்படுகிறது.
சீமான் மீது 60 வழக்குகள் பதிவு
திராவிடர் கழகம், திமுக, த.பெ.தி.க., திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சீமான் மீது புகார்கள் அளித்தன.
புகார்களை தொடர்ந்து, சீமான் மீது கோவை மாவட்டத்தில் 6 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தடாகம், பெரியநாயக்கன் பாளையம், பொள்ளாச்சி கிழக்கு, ஆனைமலை, மகாலிங்கபுரம், மேட்டுப்பாளையம் ஆகிய 6 காவல் நிலையங்களில் அவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரியார் பற்றி அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இதுவரை கோவை, கடலூர், சேலம், மதுரை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் மீது போலீசில் புகார்கள் குவிந்து வருவதால், அவர் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.