1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்.. நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு: 6 பேர் உடல் கருகி பலி..!

பெரும் சோகம்.. நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு: 6 பேர் உடல் கருகி பலி..!

தெலுங்கானாவில் இன்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர்.

தெலுங்கானா மாநிலம், மன்சேரியல் மாவட்டம் ராமகிருஷ்ணாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெங்கடாபூர் கிராமத்தில் சிவய்யா என்பவரின் வீடு நள்ளிரவு 12.30 மணியளவில் தீப்பிடித்து எரிந்துள்ளது.


இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் வீடு முழுவதும் தீயில் எரிந்து நாசமானது.

நள்ளிரவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில், வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் சிவய்யா (50), அவரது மனைவி பத்மா (45), பத்மாவின் மூத்த சகோதரியின் மகள் மோனிகா (23) மற்றும் அவரது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு உறவினர் என 6 பேர் பலியாகினர்.

இந்த தீ விபத்துக்‍கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்‍குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like