1. Home
  2. தமிழ்நாடு

அதிரடி! தமிழ்நாட்டில் 56,000 சிம் கார்டுகள் முடக்கம்!!

அதிரடி! தமிழ்நாட்டில் 56,000 சிம் கார்டுகள் முடக்கம்!!

தமிழ்நாடு முழுவதும் 56 ஆயிரம் சிம் கார்டுகளை முடக்கி சைபர் க்ரைம் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

செல்போன் அழைப்புகள் மூலம் நாள்தோறும் ஏராளமான மோசடிகள் அரங்கேற்றப்படுகின்றன. வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் அதிகம் அரங்கேறி வருகிறது. இதுபோன்ற குற்றச்சம்பவங்களுக்கு பல செல்ஃபோன் எண்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதனால் குற்றவாளிகளை பிடிப்பது சைபர் கிரைம் போலீஸாருக்கு கடும் சவாலாக உள்ளது. அவர்கள் பயன்படுத்தும் செல்போன் எண்கள் அனைத்தும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டவை.


அதிரடி! தமிழ்நாட்டில் 56,000 சிம் கார்டுகள் முடக்கம்!!

மோசடி தொடர்பாக புகார் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால், சைபர் கிரைம் போலீஸார் விவரங்களைச் சேகரித்து வந்தனர். அதன்படி புகார்கள் வந்துள்ள செல்போன் எண்களின் விவரங்களை, அந்தந்த சிம் கார்டு நிறுவனங்களுக்கு அனுப்பி அவற்றை முடக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி, இதுவரை 55,982 சிம் கார்டுகளை சைபர் கிரைம் போலீஸார் முடக்கியுள்ளனர். அதேநேரம், இதுபோன்ற போலி ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு சிம் கார்டுகளை விற்கும் நபர்களைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


அதிரடி! தமிழ்நாட்டில் 56,000 சிம் கார்டுகள் முடக்கம்!!

இந்த சிம் கார்டுகள் எந்த விற்பனை பிரதிநிதியிடமிருந்து வாங்கப்பட்டவை, எந்த நிறுவனத்தின் சிம் கார்டுகள் என விசாரித்து மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தனர்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொள்ளலாம் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் மாநில சைபர் கிரைம் போலீஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5 விற்பனை பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like