1. Home
  2. தமிழ்நாடு

500 ரூபாயால் ஏற்பட்ட பிரச்சனை.. மனைவியை பயமுறுத்திய கணவர் பலி..!

500 ரூபாயால் ஏற்பட்ட பிரச்சனை.. மனைவியை பயமுறுத்திய கணவர் பலி..!

காராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டம் விரார் மேற்கு வீர்சாவர்க்கர் மார்க் லஷ்மி நிவாஸ் என்ற கட்டித்தில் வசித்து வந்தவர் ராம்ஜி சர்மா (36). இவரது மனைவி சாந்தினிதேவி (26). ராம்ஜி சர்மா பயந்தரில் உள்ள துணி ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் மனைவி சாந்தினி தேவியிடம் புதிதாக துணி வாங்க ரூ.2 ஆயிரம் கொடுத்து இருந்தார். பின்னர், அதில் 500 ரூபாயை தனக்கு திருப்பி தருமாறும் சில நாட்கள் கழித்து தருவதாக சாந்தினி தேவியிடம் தெரிவித்தார். ஆனால் சாந்தினி தேவி பணம் தர மறுப்பு தெரிவித்தார். இதனால் தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


இந்த நிலையில், 500 ரூபாயை தராவிட்டல் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியை பயமுறுத்தி உள்ளார். ஆனால் மனைவி இதனை கண்டு கொள்ளாமல் இருந்தார். படுக்கை அறைக்கு சென்ற ராம்ஜி சர்மா சேலையால் தூக்கு போடுவது போல நாடகமாடியதாக கூறப்படுகிறது.

ஆனால், அவரது கால் விலகியதால் தவறுதலாக சேலை கழுத்தில் மாட்டிக்கொண்டது. இதனால் தூக்கில் தொங்கி மூச்சுத்திணறி மயங்கினார். இதைப்பார்த்து பதற்றமடைந்த மனைவி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like