சென்னையில் மக்கள் ஷாப்பிங் செய்ய 50 சிறப்பு பேருந்துக்கள்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செய்ய 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக சென்னையில் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ள தகவலின்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மக்கள் வணிக வளாகங்களுக்கு சென்று வர ஏதுவாக வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சென்னையில் 7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 24,25,26,31 நவம்பர் 1,7,8-ம் தேதிகளில் 25 வழித்தடங்களில் கூடுதலாக 50 சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்றும், தி.நகர், புரசைவாக்கம், வள்ளலார்நகர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவர ஏதுவாக பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு பேருந்துகளை எளிதாக அடையாளம் காண, பேருந்தின் முகப்பில் தீபாவளி சிறப்பு பேருந்து என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.