1. Home
  2. தமிழ்நாடு

50 மாணவிகளின் மத்தியில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்டதால் +2 மாணவனுக்கு என்ன நடந்தது பாருங்க..!!

50 மாணவிகளின் மத்தியில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்டதால் +2 மாணவனுக்கு என்ன நடந்தது பாருங்க..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த மணி சங்கர் என்ற இளைஞர் அங்குள்ள ஒரு உயர்க்கல்வி நிறுவனத்தில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நாளந்தா அருகே பிரில்லியண்ட் ஸ்கூல் என்னும் பள்ளியில் இண்டர் மீடியட் தேர்வு எழுத சென்றார். அங்கு அதிகளவிலான மாணவிகள் தேர்வு எழுந்த வந்திருந்த நிலையில், மாணவர்களில் ஒருசிலர் மட்டுமே வந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மணி சங்கர், 50 மாணவிகள் மத்தியில் தேர்வு எழுத அமர வைக்கப்பட்டுள்ளார்.

அருகில் ஒரு மாணவர் கூட இல்லையே என உணர்ந்து மணி சங்கர் பதற்றம் அடைய தொடங்கியுள்ளார். இதனால் அவருக்கு அவருக்கு வியர்வை கொட்டியது. இந்நிலையில், திடீரென மயங்கி கீழே விழுந்தார். அதைத் தொடர்ந்து அவருக்கு பயங்கர காய்ச்சல் உண்டானது. இதனால் மாணவர் மணி சங்கர் அங்குள்ள சதார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளதாக கூறப்படுகிறது. பதற்றம் காரணமாக ஏற்பட்ட மயக்கம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 50 மாணவிகளுக்கு நடுவில் தேர்வு எழுத அமரவைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர், பயத்தால் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Trending News

Latest News

You May Like