1. Home
  2. தமிழ்நாடு

ஜூலை 29-ல் இந்தியா வருகிறது 5 ரபேல் போர் விமானங்கள்.. சீன எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு !

ஜூலை 29-ல் இந்தியா வருகிறது 5 ரபேல் போர் விமானங்கள்.. சீன எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு !


லடாக்கில் சீன எல்லையையொட்டிய பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது.

அதன்படி சீன எல்லையை ஒட்டிய பகுதிகளில் மிராஜ் 2000, சுகோய் 30, மிக்-29 ரக போர் விமானங்களையும், அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அபாச்சி ரக ஹெலிகாப்டரையும் கொண்டு இந்திய ராணுவம் இரவு பகலாக தற்போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டின் டாசல்ட் நிறுவனத்திடமிருந்து ரூ 59 ஆயிரம் கோடியில் 36 நவீன ரக ரபேல் போர் விமானங்கள் வாங்க 2016-ல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

இந்த ஒப்பந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் புயலை கிளப்பி வந்தது. இந்நிலையில் முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் வரும் ஜூலை 29-ல் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ரபேல் விமானங்கள் அரியானாவின் அம்பாலா விமானப்படைதளத்தில் வந்திறங்க உள்ளதாகவும், பின்னர் ஆகஸ்ட் 20ல் நடக்க உள்ள விழாவில் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக லடாக் எல்லையில் சீனாவின் அட்டூழியத்தை ஒழிக்க ரபேல் ரக போர்விமானங்கள் பயன்படுத்திட இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில் அதி நவீன போர் விமானமான ரபேல் விமானங்கள் ஜூலை 29-ல் இந்தியா வரவுள்ளது இந்தியாவின் விமானப்படைக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in 

Trending News

Latest News

You May Like