1. Home
  2. தமிழ்நாடு

பிரபல குற்றவாளிகள் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது! சென்னையில் அதிரடி!

பிரபல குற்றவாளிகள் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது! சென்னையில் அதிரடி!


சென்னையில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல 5 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதற்காக M-1 மாதவரம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட மாதவரத்தைச் சேர்ந்த கார்த்திக் (எ) கார்த்திகேயன் (21), சாரதி (எ) பார்த்தசாரதி (24) ஆகியோர் தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர்.

அதே போல, S-6 சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஆகாஷ் (24) மற்றும் V-6 கொளத்தூர் காவல் கிருஷ்ணகாந்த் கிசான் (30), என்பவர் மீதும், C-3 ஏழுகிணறு காவல் நிலையத்தில், அமர் (எ) அமரேந்திரன் (22) ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 5 பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் குற்றவாளிகள் 5 நபர்களையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி 5 குற்றவாளிகளும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Trending News

Latest News

You May Like