1. Home
  2. தமிழ்நாடு

ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 லட்சம் நிவாரண உதவி - குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!

1

குவைத் நாட்டின் மங்கஃப் நகரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில், குவைத் நாட்டில் தீ விபத்தில் இறந்த 7 பேரின் விவரம்:

  • வீராசாமி மாரியப்பன் – தூத்துக்குடி
  • எபமேசன் ராஜு – திருச்சி
  • கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை – கடலூர்
  • கோவிந்தன் சிவசங்கர் – சென்னை
  • புனாஃப் ரிச்சர்ட் ராய் – தஞ்சாவூர்
  • கருப்பணன் இராமு – இராமநாதபுரம்
  • முகமது ஷெரிப் – விழுப்புரம்

தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு. 

இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளவது, குவைத் தீவிபத்தில் ஏழு தமிழர்கள் உயிரிழந்துள்ளதாக வந்த செய்தி மிகுந்த வேதனை தருகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்களைத் தனிவிமானம் மூலம் இந்தியா கொண்டு வந்து, குடும்பத்தினரிடம் விரைவில் ஒப்படைப்பதற்கான ஒருங்கிணைப்புகளைத் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.தீக்காயங்களுக்குச் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து, தமிழ்நாடு அரசு துணைநின்றிடும்.


 

Trending News

Latest News

You May Like