1. Home
  2. தமிழ்நாடு

குவைத் தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு..!

1

குவைத் தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகம்மது ஷரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குவைத் தீ விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த நிலையில், உடல்களை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என சிறுபான்மையினர் நலம் மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். 

மேலும் தூதரகம் மூலம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு தமிழ்ச் சங்கம் மூலம் தமிழ்நாடு அரசு உதவி செய்கிறது. குவைத் தமிழ்ச் சங்கம் மூலம் தேவையான தகவல்கள் திரட்டப்படுகின்றன என அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.

Trending News

Latest News

You May Like