1. Home
  2. தமிழ்நாடு

5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோ...

5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோ...

கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியுள்ளது என்றார்.


5 ஆண்டுகளில் 177 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை ஏவிய இஸ்ரோ...



இஸ்ரோவின் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி-எம்கே3 ராக்கெட்டுகள் மூலம் கடந்த 2018 முதல் 2022 வரை 5 ஆண்டுகளில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 19 நாடுகளின் 177 செயற்கைக்கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்று கூறினார்.


இதுபோன்ற வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் மூலம் 94 மில்லியன் அமெரிக்க டாலரும், 46 மில்லியன் யூரோவும் அந்நியச் செலாவணியாக இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like