1. Home
  2. தமிழ்நாடு

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!!

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!!

12 வயது சிறுவன் ஒருவன் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உக்ஹைதி என்ற பகுதியில் 5 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுவன் சிறுமியிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

பின்னர் சிறுவன் அந்த சிறுமியை தனியே ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமி தள்ளாடியபடி வீட்டுக்கு வந்துள்ளார்.


5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 12 வயது சிறுவன்!!


சிறுமியிடம் என்ன நடந்தது என்று அவரது பெற்றோர் கேட்டபோது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சிறுமி கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து போலீஸில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீஸார், சிறுவனை கைது செய்தனர். 12 வயது சிறுவன் இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உத்தரப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவம் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Trending News

Latest News

You May Like