1. Home
  2. தமிழ்நாடு

5 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

5 கோயில்களில் மருத்துவ மையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

தமிழகத்தில், பக்தர்கள் அதிகம் வருகை தரும் 5 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

2022 - 2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கையில், 'பக்தர்கள் அதிகளவில் வருகை தரும் 10 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தாண்டு மேலும் 5 திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் புதிதாக அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது.


அதன்படி, மதுரை - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், இருக்கன்குடி - அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், பண்ணாரி - அருள்மிகு பண்ணாரியம்மன் திருக்கோயில், மதுரை - அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், சங்கரன்கோவில் - அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆகிய 5 திருக்கோயில்களில் புதிதாக மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ள.

இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மருத்துவ மையங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

Trending News

Latest News

You May Like