1. Home
  2. தமிழ்நாடு

ஒரே ஆண்டில் 40 பெண்களை சீரழித்த காமூகன்.. வீட்டில் இருக்கவே அச்சப்பட்ட கிராம பெண்கள் !

ஒரே ஆண்டில் 40 பெண்களை சீரழித்த காமூகன்.. வீட்டில் இருக்கவே அச்சப்பட்ட கிராம பெண்கள் !


நைஜீரியாவில் ஒரே ஆண்டில் நாற்பது பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கையும் களவுமாக போலீசார் பிடியில் சிக்கினார்.  

நைஜீரியாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துகின்றனர்.

இந்நிலையில், கனோ நகரத்திலிருந்து 85 கிலோ மீட்டர் தொலைவில் குவானார் டங்கோரா எனும் இந்த சிறு நகரம் உள்ளது. எப்போதும் மர்மமாக இருக்கும் இந்நகரை போலீசார் எளிதில் அணுக முடியாத பகுதியாக கருதப்படுகிறது.

ஒரே ஆண்டில் 40 பெண்களை சீரழித்த காமூகன்.. வீட்டில் இருக்கவே அச்சப்பட்ட கிராம பெண்கள் !

இங்கு கடந்த ஒரு ஆண்டாக வீடுகளில் அச்சத்துடன் வாழ்ந்ததாகவும், ஏனெனில் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெண்கள் கொல்லப்பட்டதாக மக்கள் கூறகின்றனர். அதாவது வீட்டில் இருக்கும் பெண்களை குறிவைத்து இந்த கொடூரம் நடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.  
 
இந்நிலையில் நைஜீரியாவின் வடக்கு நகரமான குவானார் டங்கோராவில் ஒரு வீட்டில் இருந்து இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. அங்கு சென்ற அப்பெண்ணின் தாய், மகளின் அறையிலிருந்த அந்த கொடூர நபரைப் பிடித்தார் என்றும், ஆனால் தப்பித்துச் சென்ற அவரை பொது மக்கள் விரட்டி சென்று பிடித்தனர் என்றும் போலீசார் கூறுகின்றனர்.

ஒரே ஆண்டில் 40 பெண்களை சீரழித்த காமூகன்.. வீட்டில் இருக்கவே அச்சப்பட்ட கிராம பெண்கள் !

பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார். 10 வயது சிறுமிகள் முதல் 80 வயது பெண்கள் வரை பலரை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.

நைஜீரியாவில் மூன்றில் ஒரு பெண், 25 வயதை அடைவதற்கு முன்பு ஏதே ஒரு விதத்தில் பாலியல் தொந்தரவுகளை எதிர்கொள்வதாகச் சமீபத்தில் வெளியான ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in 

Trending News

Latest News

You May Like