1. Home
  2. தமிழ்நாடு

40 லட்ச ரூபாய் மோசடி! தந்தை மகன் கைது !

40 லட்ச ரூபாய் மோசடி! தந்தை மகன் கைது !


வெளிநாட்டில் 600 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாக நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட தந்தை மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஜீவா. இவர் இப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதில் வீடுகள் கட்டி விற்பனை செய்வது மற்றும் ஒப்பந்த முறையில் கட்டுமான பணிகளும் செய்து வருகிறார்.

இந்நிலையில் இதே ஊரைச் சேர்ந்த சஞ்சீவி அவரது மகன் இமானுவேல் ஆகிய இருவரும் ஜீவாவிடம் மாலத்தீவில் ரூபாய் 200 கோடி அளவில் ஒப்பந்த முறையில் கட்டுமான பணிகள் கட்ட வேண்டும் அங்கு பணி செய்தால் அதிக அளவு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

40 லட்ச ரூபாய் மோசடி! தந்தை மகன் கைது !

இதை நம்பிய ஜீவா இதற்கு முதலீடு அதிக அளவில் தேவைப்படும் அதற்கு என்னிடம் போதிய தொகை இல்லை என்று கூறியுள்ளார் அதற்கு வெளிநாட்டு வங்கியில் கடன் வாங்கிக்கொள்ளலாம் நாங்களே உங்களுக்கு 600 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருகிறோம் என்று கூறி அதற்கு முன்பணமாக வங்கியில் 40 லட்சம் ரூபாய் கட்ட வேண்டும். அதனால் நீங்கள் ரூபாய் 40 லட்சம் முன் பணம் கொடுத்தால் கடனை உடனடியாக பெற்று விடலாம் என்று கூறியுள்ளனர்.

அதனை நம்பிய ஜீவா அவர்களிடம் ரூபாய் 40 லட்சம் கொடுத்துள்ளார். ஜீவாவிடம் இருந்து பணத்தை பெற்றுக் கொண்ட தந்தையும் மகனும் அதன்பிறகு சரியான தகவல் சொல்லவில்லை. இதையடுத்து ஜீவா பலமுறை அவர்களிடம் கேட்டுள்ளார் அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வந்ததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவா, இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.

அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார், கொடைக்கானல் பகுதியை சேர்ந்த சஞ்சீவி மற்றும் அவரது மகன் இமானுவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Trending News

Latest News

You May Like