1. Home
  2. தமிழ்நாடு

குழந்தையை கடித்து குதறிய 4 தெரு நாய்கள்… 60 தையலுடன் சிகிச்சை!!

குழந்தையை கடித்து குதறிய 4 தெரு நாய்கள்… 60 தையலுடன் சிகிச்சை!!


கடலூரில் குழந்தையை 4 தெருநாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியைச் சேர்ந்த சேகர் – தமிழரசி தம்பதியின் இரண்டு வயது ஆண் குழந்தை தனது தாத்தாவுடன் சேர்ந்து வீட்டின் அருகே உள்ள கோல்டன் பீச் பூங்காவிற்குச் சென்றது.

அப்போது தாத்தா தண்ணீர் எடுக்க சென்ற போது, விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை சூழ்ந்துக் கொண்ட தெருநாய்கள், குழந்தையை கடித்துக் குதறின. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நாய்களை விரட்டி குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

குழந்தையை கடித்து குதறிய 4 தெரு நாய்கள்… 60 தையலுடன் சிகிச்சை!!

பிறகு மேல் சிகிச்சைக்காகப் பாண்டிச்சேரி பிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு 60 தையலுடன் குழந்தை சிகிச்சைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் குழந்தைகளின் தாய் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெயிட்டுள்ளார். அதில்தனது குழந்தைக்கு ஏற்பட்டதைப் போன்று வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது. தெருக்களில் சுற்றித் திரியும் நாய்ளை பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like