1. Home
  2. தமிழ்நாடு

இந்திய வீரர்கள் 4 பேர் வீர மரணம்..!

Q

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதல்களில் ராணுவம், இந்திய விமானப்படை வீரர் மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஜம்மு பிராந்தியத்தில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர். இதேபோல் இந்திய விமானப்படை வீரர் ஒருவரும், எல்லை பாதுகாப்பு படை உதவி ஆய்வாளர் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் படைகளின் தொடர் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூஞ்ச் கிருஷ்ணா காட்டி செக்டாரில் நேற்று காலை ஒரு பீரங்கி குண்டு வெடித்ததில் ஹிமாச்சலைச் சேர்ந்த சுபேதார் மேஜர் பவன் குமார் உயிரிழந்தார். ஆர்.எஸ்.புரா செக்டாரில் நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் ஷெல் தாக்குதலில் ஜே&கே லைட் இன்ஃபான்ட்ரியைச் சேர்ந்த 25 வயதான ரைபிள்மேன் சுனில் குமார் காயம் அடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்திய விமானப்படையின் 36வது விங்கில் மருத்துவ உதவியாளராக இருந்த 36 வயதான சார்ஜென்ட் சுரேந்திர குமார் மோகா, ஜே&கேவின் உதம்பூரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தார். அவர் பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். பதற்றம் அதிகரித்ததால் நான்கு நாட்களுக்கு முன்புதான் உதம்பூருக்கு மாற்றப்பட்டார். ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் உள்ள மெஹ்ராதாசி கிராமத்தில் உள்ள மோகாவின் குடும்பத்திற்கு சனிக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு 65 வயதான தாய் நானு தேவி, மனைவி சீமா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய கிராம மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆர்.எஸ்.புரா செக்டாரில் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு படை மீது பாகிஸ்தான் படைகள் கடுமையான துப்பாக்கிச் சூடு நடத்தியதில் உதவி ஆய்வாளர் முகமது இம்தியாஸ் உயிரிழந்தார். மேலும் ஏழு பேருடன் காயமடைந்தார். இம்தியாஸ் காயங்கள் காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்கள் நலமாக உள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்கள் ஜம்மு பிராந்தியத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like