1. Home
  2. தமிழ்நாடு

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 4 நாள் விடுமுறை..!! அதிரடி அறிவிப்பு..!!

தமிழக முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 4 நாள் விடுமுறை..!! அதிரடி அறிவிப்பு..!!


தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இதனால், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 15 ஆம் தேதி கிறிஸ்தவ பண்டிகையான புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. ஆகையால் இந்த இரு நாட்களும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சனிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகள் செயல்பட்டு அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுகிழமை பள்ளிகளுக்கு வார விடுமுறை வருகிறது. இதை அடுத்து சனிகிழமையும் சேர்த்து விடுமுறை அளித்தால் நன்றாக இருக்கும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை நிறைவேற்றம் வகையில், தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், சனிக்கிழமை ஏப்ரல் 16 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், 18 ஆம் தேதி வழக்கம் போல பள்ளிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 14 முதல் 18 வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like