1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 3,994 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் எண்ணிக்கை 78,161-ஆக உயர்வு !



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் அதில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை கிட்டதட்ட ஒவ்வொரு நாளும் பாதிப்பு நிகராகவே உள்ளது. 

அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 78-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் இன்று 3,994 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,161-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1216 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73,728-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அதேநேரத்தில் உயிரிழப்புகளும் கூடிக்கொண்டே வருகிறது. 

தொடர்ந்து 40ஆவது நாளாக இன்றும் இரட்டை இலக்கத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது. 

அந்த வகையில் இன்று ஒரேநாளில் கொரோனாவுக்கு 65 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் 1,765 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73,728ஆக உயர்ந்துள்ளது.

newstm.in 

Trending News

Latest News

You May Like