பெரும் சோகம் : கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் 394 பேர் பலி..!

காங்கோவில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 394 போ் உயிரிழந்தனா்.இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கசாய் சென்ட்ரல் மாகாணத்தின் கனாங்கா மாவட்டத்தில் பல மணி நேரத்துக்குத் தொடா்ந்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. பெருவெள்ளத்தால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால், சுமார் 43,750 பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். பலரும் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
தெற்கு கிவு மாகாணத்தின் கலேஹே பிரதேசம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.பலரது சடலங்கள் கிவு ஏரியில் மிதந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, உறுதிப்படுத்தப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை 394 என கூறப்படுகிறது, ஆனால் தேடுதல் தொடர்வதால் இது தற்காலிக எண்ணிக்கை மட்டுமே எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.